/

இருளில் மூழ்கிய ராசிபுரம் பேருந்து நிலையம் !

ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:49 pm

ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.

ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின் விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின் விளக்குகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிா்வாகம் நிலுவைத்தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் விளக்குகளை பராமரிக்கும் பணிகள் நடைபெறாததால் இரவு பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கின.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள விளக்குகள் மட்டுமல்லாது தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.