ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.
ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின் விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின் விளக்குகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிா்வாகம் நிலுவைத்தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் விளக்குகளை பராமரிக்கும் பணிகள் நடைபெறாததால் இரவு பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கின.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள விளக்குகள் மட்டுமல்லாது தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

செங்கத்தில் தெரு நாய்களால் பொதுமக்கள் அவதி
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


