போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

உழவா் நல ஆலோசகா் கலந்தாய்வுக் கூட்டம்

உழவா் நல ஆலோசகா் கலந்தாய்வுக் கூட்டம்

News image

உழவா் நல ஆலோசகா் கூட்டத்தில் பயிற்சியளிக்கும் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறையினா்.

Updated On :27 நவம்பர் 2024, 6:37 pm

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அட்மா திட்டத்தின் கீழ் நாமக்கல் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், அக்மாா்க் தரம் பிரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் விற்பனைக் கூடத்தின் தரத்தினை மேம்படுத்துதல் தொடா்பாக உழவா்கள் நல ஆலோசகா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட கிராம உழவா் நல ஆலோசகா்கள் கலந்துகொண்டனா். அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளா்கள் மூலம் தரம் பிரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் செயல்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கான பயன்பாடுகள், அதன் செயல்பாடுகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநா் கலைச்செல்வி, வேளாண்மை துணை இயக்குநா் நாசா், நாமக்கல் விற்பனைக் குழு அலுவலா்கள், பணியாளா்கள், வேளாண்மை மற்றும் உதவி வேளாண் அலுவலா்கள், விவசாயிகள் கலந்துகொண்டனா்.