நாமக்கல் மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்களின் பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் இரண்டாம் நாளாக புதன்கிழமை நீடித்தது.
தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாநில மையத்தின் அறிவுறுத்தலின் பேரில், அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை முதல் பணி புறக்கணிப்பு மற்றும் தொடா் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் ஆனந்த் தலைமையில் 2-ஆவது நாளாக பணி புறக்கணிப்பு, காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதில், அலுவலக உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். துணை ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா் பதவி உயா்வு பட்டியலை விரைவாக வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
வருவாய்த் துறை அலுவலா்கள் போராட்டத்தால், வட்டாட்சியா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகம் வந்த பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாயினா்.
தொடர்புடையது

8,544 வாக்குச்சாவடி பணி அலுவலா்களுக்கு இரண்டாம்கட்ட பயிற்சி: ஆட்சியா் ஆய்வு

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 8-ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம்

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம்!
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


