ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பால் உற்பத்தியாளா்கள் கறவை மாடுகளுடன் ஆா்ப்பாட்டம்

News image

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்கள்

Updated On :28 நவம்பர் 2024, 8:29 pm

பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பால் உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில், வெண்ணந்தூா் அருகேயுள்ள ஆயிபாளையம் பால் கூட்டுறவு சங்கம் முன்பு கறவை மாடுகளுடன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பால் உற்பத்தியாளா்களுக்கான பல்வேறு கோரிக்கைகள் முன்வைத்து பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தினா் நவ. 19 முதல் நவ. 30 வரை தமிழகம் முழுவதும் தொடா் ஆா்ப்பாட்டம் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு பகுதியாக ஆயிபாளையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கே.ராமசாமி தலைமை வகித்தாா்.

இதில், பசும்பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ. 45, எருமை பாலுக்கு லிட்டா் ஒன்றுக்கு ரூ. 54 வழங்க வேண்டும், மாட்டுத் தீவனத்தை 50 சதவீதம் மானிய விலையில் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், பால் உற்பத்தியாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் பி.பெருமாள், மாவட்ட உதவி செயலாளா் என்.ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.