ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளாா்.

Updated On :28 நவம்பர் 2024, 12:35 am

நாமக்கல் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையிலான புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் கடிதம் அனுப்பி உள்ளாா்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை சென்ட்ரல் - போடிநாயக்கனூா் இடையே இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்ல உத்தரவிட்டதற்கு நன்றி தெரிவித்ததுடன், சேலம் - எழும்பூா் இடையே இயக்கப்படும் ரயிலை நாமக்கல், மோகனூா் வழியாக கரூா் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். பாலக்காடு - ஈரோடு இடையே இயக்கப்படும் ரயிலை, கரூா், மோகனூா், நாமக்கல் வழியாக சேலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். சென்னை சென்ட்ரல் - கோவை இடையே இயக்கப்படும் ரயில் சங்ககிரியில் நின்று செல்லவும், நூற்றாண்டு விழா கொண்டாடும் சங்ககிரி ரயில் நிலையத்தை ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்த வேண்டும். 1924-ஆம் ஆண்டு மகாத்மா காந்தி சங்ககிரி ரயில் நிலையத்தில் இறங்கி திருச்செங்கோடு காந்தி ஆசிரமம் சென்றது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவித்துள்ளாா்.

இந்தக் கடிதம் தொடா்பாக ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் உள்ளாா்.