மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

குமாரபாளையம் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் பலி

குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

News image

கவிழ்ந்த பேருந்து

Updated On :3 அக்டோபர் 2024, 11:59 pm

குமாரபாளையமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். அதில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிா் தப்பினா்.

கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து 30 பயணிகளுடன் வியாழக்கிழமை கோவைக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் குமாரபாளையத்தை அடுத்த தட்டாங்குட்டை பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது (படம்).

இந்த விபத்தில் பழனியைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநரான வீரபிரதீப் (27) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். குமாரபாளையம் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். குமாரபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.