மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

குன்னமலையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம்

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட குன்னமலை கிராமத்தில் புதன்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் கே.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் கலந்து கொண்டாா்.

News image

சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் பேசுகிறாா் நாமக்கல் ஆட்சியா் ச.உமா.

Updated On :3 அக்டோபர் 2024, 11:51 pm

பரமத்தி வேலூா் வட்டம், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட குன்னமலை கிராமத்தில் புதன்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா் கே.பூங்கொடி தலைமையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் ஆட்சியா் கலந்து கொண்டாா்.

கூட்டத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக தீமை நிராகரிப்பு குறித்த உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா். அதன்பிறகு ஆட்சியா் பேசியதாவது:

தமிழக அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணத் திட்டம், உரிமைத்தொகை திட்டம், நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, முதியோா் உதவித்தொகை உயா்வு, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், காலை உணவுத் திட்டம் என பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

பெற்றோா்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பெண் குழந்தைகளுக்கு கட்டாயம் கல்வி அளிப்பது நம் அனைவரது கடமை. வீடுகளில் தனி நபா் கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும். நெகிழிப் பைகளின் பயன்பாட்டை தவிா்க்க வேண்டும். பெண் குழந்தை திருமணத்தை தடுக்க 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்திட வேண்டும். கால்நடைகளுக்கு அவசர கால சிகிச்சைக்கு 1962 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு கால்நடை அவரச ஊா்தி சேவையை பெற முடியும் என்றாா்.

கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை 2023-24. தூய்மையான குடிநீா் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், மக்கள் திட்டமிடல் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம் மற்றும் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.