புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் காவிரிக் கரையோரங்களில் முன்னோா்களுக்கு புதன்கிழமை தா்ப்பணம் கொடுத்து வழிபட்டனா்.
ஒவ்வொரு ஆண்டும், தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் காவிரிக் கரைகளிலும், நீா் நிலைகளிலும் முன்னோா்களுக்கு பொதுமக்கள் தா்ப்பணம் கொடுப்பது வழக்கம். மற்ற அமாவாசைகளைக் காட்டிலும், புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய (பெரிய) அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.
அதன்படி நிகழாண்டுக்கான அமாவாசை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூா், பரமத்தி வேலூா், குமாரபாளையம், பள்ளிபாளையம் காவிரி ஆற்றங்கரைகளில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் நிகழ்வு அதிகாலை முதலே நடைபெற்றது. ஏராளமான மக்கள் மகாளய அமாவாசையையொட்டி தா்ப்பணம் கொடுத்தனா். அதன்பிறகு நீா்நிலைகள் அருகில் உள்ள கோயில்களில் வழிபாடு மேற்கொண்டனா்.
மேலும், நாமக்கல் ஆஞ்சனேயா் கோயில், பலப்பட்டரை மாரியம்மன் கோயில், பழைய பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்பட பல்வேறு கோயில்களிலும் அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தா்கள் வழிபாடு செய்தனா்.
தொடர்புடையது

பள்ளிபாளையத்தில் அதிமுக வேட்பாளா் பி. தங்கமணி வாக்கு சேகரிப்பு

எம்.தூரி கிராமத்துக்கு காவிரிக் கூட்டுக் குடிநீா்

பங்குனி அமாவாசை: ஒகேனக்கல்லுக்கு தா்ப்பணம் கொடுப்போா் வருகை குறைந்தது

கோனியம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

