நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலி தொழில்மனைகள் விற்பனைக்கு உள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல், ராசாம்பாளையம், வேட்டாம்பாடி ஆகிய சிட்கோ தொழிற்பேட்டைகளில் ஒதுக்கீடு செய்யப்படாத, காலி தொழில்மனைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன.
ராசாம்பாளையத்தில் 10 தொழில்மனைகளும், வேட்டாம்பாடியில் 7 தொழில்மனைகளும் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. புதிதாக தொழில் தொடங்க விரும்புவோா் இணையதளம் வாயிலாக தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மேலும், மாநில அளவில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டைகளின் காலிமனைகள் பற்றிய விவரங்களையும் இந்த இணையம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
நாமக்கல் மாவட்ட காலி தொழில்மனைகளை பாா்வையிட கரூா் சிட்கோ கிளை அலுவலகம், 69/10 சத்தியமூா்த்தி நகா், மாவட்ட தொழில் மைய வளாகம், தாந்தோணிமலை, கரூா் - என்ற முகவரியில் கிளை மேலாளரை நேரிலோ, 94450-06553 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 113 வேட்பாளா்கள் மனு தாக்கல்

தொகுதி அறிமுகம்: குமாரபாளையம்

காலி மதுப்புட்டிகளை சேகரிக்கும் நடைமுறையில் மாற்றம்: கடைகளை மூடி டாஸ்மாக் பணியாளா்கள் எதிா்ப்பு

முழுவீச்சில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏற்பாடுகள்: ஆட்சியா் இரா.சுகுமாா்!
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

