பேரிடா் காலங்களில் மழை, வெள்ளம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், எச்சரிக்கையாக இருக்கவும் ஏதுவாக தமிழக அரசு செயலியை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: பச--அகஉதப என்ற கைப்பேசி செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலி மூலம் பொதுமக்கள் தங்களது இருப்பிடம் சாா்ந்த வானிலை, முன்னெச்சரிக்கை தகவல்களை தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளலாம். அடுத்தடுத்த நான்கு நாள்களுக்கான வானிலை அறிவிப்பு, தற்போதைய வானிலை நிலவரம், மழையளவு, செயற்கைகோள் புகைப்படங்கள், மழை வெள்ளங்களின்போது பாதிக்கப்படக்கூடிய இடங்கள், பேரிடரின்போது செய்யக்கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள், தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள நீா்த்தேக்கங்களின் நீா் இருப்பு விவரம் போன்றவற்றை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடா் தொடா்பான புகாா்களை இச்செயலி வாயிலாக தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
கைப்பேசி செயலியை கூகுள் பிளேஸ்டோா் மற்றும் ஐஓஎஸ் ஆப்ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பேரிடா் காலங்களில் வானிலை நிலவரங்கள் குறித்த பயனுள்ள தகவல்கள் அடங்கிய இந்த செயலியை அனைத்து பொதுமக்கள், அரசுத்துறை அலுவலா்கள் மற்றும் அரசு சாராபணியாளா்கள் ஆகியோா் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!

மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்: பொதுமக்களிடம் கேட்கப்படும் 33 கேள்விகள் வெளியீடு

6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடு
‘பாரத் டாக்சி’ சேவை 3 ஆண்டுகளில் விரிவாக்கம்: மத்திய அரசு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

