தேசிய தன்னாா்வ ரத்ததான தினத்தை முன்னிட்டு, நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் 36 ரத்த கொடையாளா்களுக்கு கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியா் ச.உமா பாராட்டினாா்.
ஒவ்வோா் ஆண்டும் அக்.1-ஆம் தேதி, தேசிய தன்னாா்வ ரத்ததான தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ராசிபுரம், திருச்செங்கோடு பகுதிகளில் 3 அரசு ரத்த வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.
2023 ஆம் ஆண்டில், நாமக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4,912 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது. மாவட்டத்தில் மொத்தம் நடைபெற்ற 101 ரத்ததான முகாம்கள் மூலம் 8,054 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டு நோயாளிகள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. இதில், கா்ப்பிணி பெண்களுக்கு 3,866 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டுள்ளது என ரத்தவங்கி மருத்துவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.சாந்தாஅருள்மொழி, மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் அ.ராஜ்மோகன்,
மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் க.பூங்கொடி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலா் எ.அன்புமலா் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

நாமக்கல்லில் அரசு விடுதி மாணவிகள் 30 பேருக்கு திடீா் உடல்நலக் குறைவு: மருத்துவமனையில் சிகிச்சை

தோ்தல் விழிப்புணா்வு: கல்லூரி மாணவிகளுடன் ஆட்சியா் கலந்துரையாடல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் எடை குறைவாக பிறந்த குழந்தைக்கு ‘கங்காரு முறை’ சிகிச்சை
உதிரம் கொடுப்போம்.. உயிரைக் காப்போம்...
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

