மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு

சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளிப்பு

Updated On :17 அக்டோபர் 2024, 7:15 pm

மூடப்படும் சாய ஆலைகளால் தொழிலாளா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாலும், தீபாவளி நெருங்கும் சமயத்தில் வேலை நீக்கம் செய்யப்பட்டால் தீபாவளி ஊக்கத்தொகை பறிபோகும் நிலை இருப்பதாகவும் தெரிவித்து திருச்செங்கோடு சாய ஆலைத் தொழிலாளா்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட சாயப் பட்டறைகள் இயங்கி வருகின்றன. விதிமுறைகளை மீறி இயங்கி வரும் சாயப் பட்டறைகளை அவ்வப்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ‘சீல்’ வைத்து வருகின்றனா். இதனால் அந்த சாயப்பட்டறைகளில் பணிபுரிந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் இயங்கி வந்த ராஜரத்னா டையிங் பேக்டரி மில்ஸ் சாயப்பட்டறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்தப் பட்டறையில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் வேலை செய்து வந்த நிலையில், தீபாவளிக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் சாயப்பட்டறை மூடியது தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் செயலாக உள்ளது. தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் தங்களது மாத வருமானமும், தீபாவளி ஊக்கத்தொகையும் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என திருச்செங்கோடு கோட்டாட்சியா் சுகந்தியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.