நாமக்கல் மாவட்டத்தில் வெங்காயம் பயிரிட்டுள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி, மல்லசமுத்திரம், புதுச்சத்திரம், ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூா் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் முக்கிய தோட்டக்கலைப் பயிராக சின்ன வெங்காயம் உள்ளது. இந்தப் பயிரை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ரபி சிறப்பு பருவத்துக்கான புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய வேண்டும்.
சின்ன வெங்காயம் பயிா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு ரூ. 2,075-ஐ பிரீமியமாக அருகில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் செலுத்தலாம். காப்பீடு செய்ய நவ. 30 கடைசி நாளாகும். தேவையான ஆவணங்களாக அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதாா் அட்டை, புகைப்படம் வழங்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, அந்தந்த பகுதி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களை அணுகி காப்பீடு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

யூரியா தட்டுப்பாட்டால் சொா்ணவாரி சாகுபடி பாதிப்பு! விவசாயிகள் வேதனை!!

முந்திரி, பலாவிற்கு ஆதார விலை... தோ்தல் நேரத்தில் கடலூா் விவசாயிகள் எதிா்பாா்ப்பு!

தென்னை சாா்ந்த தொழிற்பேட்டை தேவை!

நாகையில் நாளை வேளாண்மை கண்காட்சி: விவசாயிகளுக்கு அழைப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

