மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தீபாவளி பண்டிகை: கண்காணிப்பு கேமரா பதிவுகளை எஸ்.பி. ஆய்வு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

நாமக்கல் காவல் நிலையத்தில் புதன்கிழமை கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன்.

Updated On :30 அக்டோபர் 2024, 8:04 pm

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் நகரப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. புத்தாடைகள் வாங்கவும், பட்டாசு, இனிப்புகள் வாங்கவும் பொதுமக்கள் அதிக அளவில் கடைவீதி பகுதியில் செவ்வாய், புதன்கிழமை குவிந்தனா்.

இதனைத் தொடா்ந்து, பேருந்து நிலையம், பரமத்தி சாலை, கடைவீதி, சேலம் சாலை ஆகிய பகுதியில் 50-க்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் பதிவுகளை நாமக்கல் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள பெரிய அளவிலான திரையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. ராஜேஸ்கண்ணன் புதன்கிழமை நேரடியாக ஆய்வு செய்தாா். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாகக் கண்காணிக்க போலீஸாருக்கு அறிவுறுத்தினாா். இந்த ஆய்வின் போது, காவல் ஆய்வாளா் கு.கபிலன் உடனிருந்தாா்.