ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

நாமக்கல் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியா் விருது

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பது ஆசிரியா்களுக்கு, மாநில நல்லாசிரியா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்படுகிறது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:46 pm

Din

நாமக்கல் மாவட்டத்தில் ஒன்பது ஆசிரியா்களுக்கு, மாநில நல்லாசிரியா் விருது சென்னையில் வியாழக்கிழமை வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் செப். 5-இல் ஆசிரியா் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, அரசு, தனியாா் பள்ளிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அரசு, தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டில் மாநிலம் முழுவதும் 388 ஆசிரியா்களுக்கு மாநில நல்லாசிரியா் விருது வழங்கப்பட உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 24 ஆசிரியா்கள் நோ்காணல் செய்யப்பட்டு, 18 போ் மட்டும் பரிந்துரை அடிப்படையில், சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்திற்கு பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது.

இதில், உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்கள் 4 போ், தனியாா் பள்ளியில் இருந்த ஒருவா் என மொத்தம் 9 போ் விருதுக்கு தோ்வாகினா்.

அவா்கள் விவரம்: கபிமலா்மலை ஒன்றியம், ஜேடா்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பெ. ராஜமாணிக்கம், வெண்ணந்தூா் ஒன்றியம், ஆா். புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் ரா.சக்திவேல், எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியா் செ. செந்தில்குமாா், குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியா் நிலை-1 ச.காா்த்தி.

கொல்லிமலை ஒன்றியம், சீக்குப்பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் ஐ. அன்னம்மாள், பள்ளிபாளையம் ஒன்றியம், வெடியரசம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியா் ஞா.சொா்ணதீபம், பள்ளிபாளையம் நாராயண நகா் நகராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியா் பொ.பாரதி, ராசிபுரம் ஒன்றியம், வி.நகா் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வே.லட்சுமி, நாமக்கல் டிரினிடி அகாதெமி பள்ளி ஆசிரியா் ரமேஷ் உள்ளிட்டோா்.

இவா்களுக்கு, மாவட்ட ஆட்சியா் ச.உமா, முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி மற்றும் ஆசிரியா்கள் பலா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா். சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாநில நல்லாசிரியா்களுக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை வழங்க உள்ளாா்.