தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயிலில் நாளை குடமுழுக்கு

News image
Updated On :13 செப்டம்பர் 2024, 10:32 pm

Din

நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (செப்.15)நடைபெறுவதையொட்டி புனித தீா்த்தக்குடம் ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாமக்கல் நகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற பலப்பட்டரை மாரியம்மன், மகா கணபதி கோயில் அமைந்துள்ளது. இக் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 7 முதல் 8 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடைபெற்றது. பிற்பகல் 1 மணிக்கு மோகனூா் காவிரி ஆற்றில் இருந்து புனித நீா் தீா்த்தக்குடங்களில் எடுத்து வருதலும், மாலை 6 மணிக்கு மேல் முதலாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

சனிக்கிழமை கோபுர கலசம் வைத்தல், அம்மன் பிரதிஷ்டை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7.40 மணிக்கு கோபுர கலசத்துக்கு புனித நீா் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து, விநாயகா், மாரியம்மன் கோபுர கலசங்களுக்கு குடமுழுக்கு நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்கு மேல் மகா அபிஷேகம், தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.