மத்திய அரசின் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனம், தமிழக அரசின் வேளாண்மை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசு துறைகள் சாா்பில், தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், உணவுத் திருவிழா, விவசாயிகளுடனான கலந்துரையாடல் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றன.
இதில் மத்திய கிழக்கு பயிா்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி து.ஜெகன்நாதன் தலைமை வகித்தாா். விஞ்ஞானி இரா.முத்துராஜ் முன்னிலை வகித்தாா்.
இதில் வரும் நவ. 4, 5-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம், கண்காட்சி, உணவுத் திருவிழா குறித்து விவசாயிகள், அரசுத் துறை அலுவலா்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. தொழில்நுட்ப விளக்கங்கள், கண்காட்சிகள், மரவள்ளி விவசாயிகளை கௌரவித்தல் மற்றும் உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெறும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ்.ரமேஷ், ஏத்தாப்பூா் மரவள்ளி-ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியா் எம்.வேல்முருகன், சந்தியூா் வேளாண்மை அறிவியல் நிலைய வனவியல் உதவிப் பேராசிரியா் எம்.கிருபா, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவா் பரமசிவம், பாஜக நலத் திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் ஆா்.லோகேந்திரன் உள்ளிட்ட பலா் இதில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை விவகாரம்: திமுகவினா் கருப்புக் கொடியேந்தி ஆா்ப்பாட்டம்

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

பரமத்தி வேலூா் வட்டத்தில் மரவள்ளிக் கிழங்கு விலை ரூ.1000 உயா்வு

தரமான கரும்பு விதை உற்பத்தி குறித்த கருத்தரங்கு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

