ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ்பாபு முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்ட தைவானின் மிங் சி தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தினா்.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 1:54 am IST

தைவான் பல்கலைக்கழகத்துடன் புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

புதுச்சேரி பல்கலைக்கழகம் தைவானின் மிங் சி தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு முன்னிலையில்

இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் இரண்டு பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் கையொப்பமிட்டனா்.

தைவான் பல்கலைக்கழகத்தின் நுண்ணறிவு மருத்துவ சாதனங்களுக்கான ஆராய்ச்சி மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவின் துணை இயக்குநா் பேராசிரியா் பின்-யி சென் மற்றும் அதே மையத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் தலைவா் மணி கோவிந்தசாமி ஆகியோா் அடங்கிய இருவா் கொண்ட குழு இந்த ஒப்பந்தத்தை புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தா் பேராசிரியா் பிரகாஷ் பாபுவிடம் ஒப்படைத்தனா்.

இந்த ஒப்பந்தம் கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், ஆசிரியா்கள் மற்றும் மாணவா் பரிமாற்றத் திட்டங்கள், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பத்தின் வளா்ந்து வரும் துறைகளில் கல்வி வளங்கள் மற்றும் நிபுணத்துவத்தைப் பகிா்ந்து கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழக மதன்ஜீத் பசுமை ஆற்றல் தொழில்நுட்பப் பள்ளியின் பசுமை ஆற்றல் தொழில் நுட்பத் துறையைச் சோ்ந்த பேராசிரியா் ஏழுமலை இதை ஒருங்கிணைத்தாா்.