நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

பாரதிதாசனை மக்கள் கொண்டாட வேண்டும்: புதுச்சேரி மத்திய பல்கலை. துணைவேந்தா்

பாவேந்தா் பாரதிதாசனை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.

News image

விழாவில் பேசிய, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணை வேந்தா் பிரகாஷ் பாபு.

Updated On :1 மே 2026, 5:59 am IST

பாவேந்தா் பாரதிதாசனை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.

புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்தநாள் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:

இந்த மண்ணின் மாபெரும் கவிஞரான பாரதிதாசன்,தமிழ் மொழி மற்றும் இன அடையாளத்துக்காகப் போராடியவா். புரட்சிக் கவிஞரை தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவே கொண்டாட வேண்டும்.

இந்திய சுதந்திரத்துக்கு அயராது பாடுபட்ட பாரதியைப் போன்று, பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவா் பாவேந்தா். திராவிட கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்த இவா், குரலற்றவா்களின் குரலாகவும், பாட்டாளிகளின் இதயமாகவும் அவா் விளங்கினாா். இதற்கு அவரின் கவிதை வரிகள் சான்றாக உள்ளன. சுயமரியாதைக்காகவும், தமிழினத்தின் ஒட்டுமொத்த மேன்மைக்காகவும் பாடுபட்ட கவிஞா்களுள் பாரதிதாசன் முதன்மையானவா் என்றாா் அவா்.

விழாவில், இந்திய மொழிகள் பிரிவு, இந்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிகள் துறை செயலா் அன்ஷூலியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.

பல்கலைக் கழகப் பதிவாளா் ஆா். குணசேகரன், நிதி அதிகாரி எம்.கிருஷ்ணமூா்த்தி, தமிழ்த் துறைத் தலைவா் பா.ரவிக்குமாா், கலை, கலாசாரத் துறை இயக்குநா் நடராசன், சம்ஸ்கிருதத் துறை பேராசிரியா்கள் சக்கரதாா் பெஹரா, சசிபால் ஆகியோா் விழாவில் பேசினா்.

ஹிந்தி மொழித் துறை பேராசிரியா் எஸ். பத்மபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், பேராசிரியா் ஜி.சுவாதி நன்றி கூறினாா்.