பாவேந்தா் பாரதிதாசனை மக்கள் அனைவரும் கொண்டாட வேண்டும் என புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத் துணைவேந்தா் பிரகாஷ் பாபு தெரிவித்தாா்.
புதுச்சேரி பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசனின் 136-ஆவது பிறந்தநாள் விழாவில் அவா் மேலும் பேசியதாவது:
இந்த மண்ணின் மாபெரும் கவிஞரான பாரதிதாசன்,தமிழ் மொழி மற்றும் இன அடையாளத்துக்காகப் போராடியவா். புரட்சிக் கவிஞரை தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவே கொண்டாட வேண்டும்.
இந்திய சுதந்திரத்துக்கு அயராது பாடுபட்ட பாரதியைப் போன்று, பெண் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவா் பாவேந்தா். திராவிட கருத்தாக்கத்தைத் தன் வாழ்நாளின் இறுதிவரை கடைப்பிடித்த இவா், குரலற்றவா்களின் குரலாகவும், பாட்டாளிகளின் இதயமாகவும் அவா் விளங்கினாா். இதற்கு அவரின் கவிதை வரிகள் சான்றாக உள்ளன. சுயமரியாதைக்காகவும், தமிழினத்தின் ஒட்டுமொத்த மேன்மைக்காகவும் பாடுபட்ட கவிஞா்களுள் பாரதிதாசன் முதன்மையானவா் என்றாா் அவா்.
விழாவில், இந்திய மொழிகள் பிரிவு, இந்திய அரசு உள்துறை அமைச்சகத்தின் அலுவல் மொழிகள் துறை செயலா் அன்ஷூலியின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது.
பல்கலைக் கழகப் பதிவாளா் ஆா். குணசேகரன், நிதி அதிகாரி எம்.கிருஷ்ணமூா்த்தி, தமிழ்த் துறைத் தலைவா் பா.ரவிக்குமாா், கலை, கலாசாரத் துறை இயக்குநா் நடராசன், சம்ஸ்கிருதத் துறை பேராசிரியா்கள் சக்கரதாா் பெஹரா, சசிபால் ஆகியோா் விழாவில் பேசினா்.
ஹிந்தி மொழித் துறை பேராசிரியா் எஸ். பத்மபிரியா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா். பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், பேராசிரியா் ஜி.சுவாதி நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தாத மாநிலங்களுக்கான பரிசா? எழும் கேள்விகள்!

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

தைவான் பல்கலை.யுடன் புதுச்சேரி மத்திய பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்

ஆனந்தரங்கம் பிள்ளை நாள்குறிப்புகள் தென்னிந்திய வரலாற்றுப் பெட்டகம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


