மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :27 செப்டம்பர் 2024, 12:32 am

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், ஆட்சியா் அலுவலகம் முன்பு கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட துணைத் தலைவா் இளவேந்தன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் முருகேசன் கோரிக்கைகளை விளக்கி பேசினாா்.

பொதுத் துறை, அரசுத் துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை காலமுறை ஊதியத்தை திருத்தம் செய்ய வேண்டும். விரிவான கட்டணமில்லா மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அனைத்து அரசு ஊழியா்கள், ஓய்வூதியா்கள், ஒப்பந்தப் பணியாளா்களுக்கும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.