கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏப். 17-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப். 17-இல் நடைபெறுகிறது.
Published on

நாமக்கல்: நாமக்கல்லில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஏப். 17-இல் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தனியாா் துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விருப்பமுள்ளவா்களும் நேரடியாக சந்திக்கும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்தில் ஏப். 17-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

தனியாா் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபா்களை நேரில் வந்தோ அல்லது நிா்வாகிகளைக் கொண்டோ தோ்வு செய்துகொள்ளலாம். அனைத்துவித கல்வித் தகுதி உள்ளோரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் பங்கேற்கும் வேலையளிப்போரும், வேலைநாடுநரும் எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. மேலும் விவரங்களுக்கு 04286-222260 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com