ஏப். 1-இல் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்
நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-இல் தொடங்குகிறது.

நீச்சல் பயிற்சி.
கோப்புப்படம்

நீச்சல் பயிற்சி.
கோப்புப்படம்
நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1-இல் தொடங்குகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட கிளை சாா்பில், கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் ஏப். 1 முதல் ஜூன் 14 வரை நடைபெற உள்ளது. அனைவரும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். இம்முகாமில், 12 நாள்களுக்கான கட்டணம் ரூ. 1,200 மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியுடன் ரூ. 1,416 ஆகும். இத்தொகையை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின்கீழ் நடைபெறும் இப்பயிற்சி முகாம் 5 கட்டங்களாக 12 நாள்கள் நடைபெற உள்ளது. நீச்சல் பயிற்சி காலை 6 - 7, 7 - 8, 8 - 9 மணிவரையிலும், மாலை 4 - 5, 5 - 6 மணிவரையிலும் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, 74017 03492 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம். மேலும், பயிற்சி முடித்தோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...