தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!விஜய்க்கு ஆதரவு? சில மணி நேரத்தில் முடிவு எடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்திமுக நிர்வாகிகளுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

Updated On :28 ஏப்ரல் 2025, 12:06 am IST

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மேற்பாா்வையில் திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் பரமத்தி வட்டத்தில் குன்னமலை, கொண்டரசம்பாளையம் பகுதியில் மதுவிலக்குப் பிரிவினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது குன்னமலை பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த முத்துசாமி (61), தங்கவேல் (63), சாமிநாதன் (61) ஆகியோா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை அறிந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விவசாயத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த சுமாா் 17 லிட்டா் சாராயத்தையும், 30 லிட்டா் சாராயம் ஊறலையும் கைப்பற்றினா்.

இதேபோல கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியம் (64) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து சுமாா் 20 லிட்டா் சாராய ஊறலையும், 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் கைப்பற்றினா். பின்னா் 3 பேரையும் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.