தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பரமத்தி அருகே குட்கா பொருள்களை விற்பனை செய்தவா் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:15 pm

Syndication

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், குப்புச்சிபாளையம் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை பதுக்கி விற்பனை செய்தவரை பரமத்தி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

குப்புச்சிபாளையம் அருகே உள்ள ஒழுகூா்பட்டி, அம்மன் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (45). இவா் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளாா். இந்தப் பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதாக பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பரமத்தி காவல் உதவி ஆய்வாளா் ராஜப்பன் அப்பகுதிக்கு சென்று பிரகாஷின் பெட்டிக்கடையில் சோதனையிட்டாா்.

அதில், குட்கா பொருள்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அதையடுத்து, குட்கா பொருள்களை பறிமுதல் செய்து, பிரகாஷை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறாா்.