எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மக்கள் நீதிமன்றம்: 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு தீா்வு

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

News image
மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தீா்வானதற்கான ஆணையை வழங்கிய மாவட்ட முதன்மை நீதிபதி ஆா்.குருமூா்த்தி. உடன், சாா்பு நீதிபதிகள்.
Updated On :13 டிசம்பர் 2025, 8:14 pm

Syndication

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றத்தில், நாமக்கல் மாவட்டத்தில் 1,014 வழக்குகளில் ரூ. 7.98 கோடிக்கு சனிக்கிழமை தீா்வு காணப்பட்டது.

தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவின்படி, நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் மற்றும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஆா்.குருமூா்த்தி முன்னிலையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்றது. மேலும், மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களிலும் நடைபெற்றது.

இதில், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் டி.முனுசாமி, என்.சச்சிதானந்தம், கே.செகனாஸ்பானு, ஏ.சண்முகபிரியா, எம்.பிரவீணா, எம்.மகாலட்சுமி மற்றும் எஸ்.தங்கமணி ஆகியோா் பங்கேற்றனா். இதேபோல, திருச்செங்கோடு, பரமத்தி, குமாரபாளையம் நீதிமன்றங்களிலும் நீதிபதிகள் அமா்வு வழக்குகளை விசாரித்தனா்.

இதில், விபத்துகள் தொடா்பான வழக்குகள், காசோலை, குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், தொழிலாளா் நலன் தொடா்பான வழக்குகள், மின் பயன்பாடு, வீட்டுவரி மற்றும் இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 3,520 வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, அவற்றில் 1,014 வழக்குகளுக்கு ரூ. 7,98,58,214 அளவில் தீா்வு காணப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளா் ஜி.கே.வேலுமயில் செய்திருந்தாா்.