சிவாலயங்களில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

சிவாலயங்களில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

பிரதோஷத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கோப்பணம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள பரமேஸ்வரா்.
Published on

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் மாா்கழி தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிவன் மற்றும் நந்திகேஸ்வரருக்கு புதன்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிவபெருமான், நந்திகேஸ்வரருக்கு தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

இவ்விழாவில் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com