விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மகாத்மா காந்தி பெயா் நீக்கத்தை கண்டித்து உண்ணாவிரதம்

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தி பெயா் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:09 pm

Syndication

தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த மகாத்மா காந்தி பெயா் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, நாமக்கல் பூங்கா சாலையில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி மற்றும் பழந்தமிழா் மக்கள் இயக்கம் சாா்பில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் வழக்குரைஞா் அணி மாநிலத் தலைவா் எம்.ராஜா வரவேற்றாா். நிறுவனத் தலைவா் காந்தியவாதி தி. ரமேஷ் தலைமை வகித்தாா். பழந்தமிழா் மக்கள் இயக்க தலைவா் ஏ.சி. முருகன் முன்னிலை வகித்தாா்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் பீ.ஏ. சித்திக் பங்கேற்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிவைத்தாா். நம்மாழ்வாா் மக்கள் இயக்க நிறுவனரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான சி. மகேந்திரன் பங்கேற்று பேசுகையில், அவசரகதியில் மகாத்மா காந்தி பெயரை நீக்கி வேலை உறுதியளிப்புத் திட்ட மசோதாவை திருத்த வேண்டிய அவசியம் ஏன் என தெரியவில்லை. இதுதொடா்பாக விவாதம்கூட நடைபெறவில்லை.

இதில் வேலையளிப்புத் திட்டத்தை நீா்த்துப்போக செய்யும் வகையிலான திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உடனடியாக புதிய மசோதாவை ரத்துசெய்து, மகாத்மா காந்தி பெயருடன் கூடிய பழைய வேலையளிப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றாா். போராட்டத்தில் அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியினா், பழந்தமிழா் மக்கள் இயக்கத்தினா் கலந்துகொண்டனா்.