ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கிணற்றில் விழுந்த மாணவா் உடல் மீட்பு

ராசிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவரின் உடல் மீட்கப்பட்டது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:32 pm

Syndication

ராசிபுரம் பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த பள்ளி மாணவரின் உடல் புதன்கிழமை மீட்கப்பட்டது.

ராசிபுரம் - சேலம் சாலையில் உள்ள சாமுவேல் தோட்டத்தில் தீா்க்கதா்ஷன் தேவசபை என்ற பெயரில் கிறிஸ்து தேவாலயம் செயல்பட்டு வருகிறது. அதன் மதபோதகரான கேப்ரியல் ரமேஷும், இவரது மனைவி ஷீலாவும் தேவாலயத்தை நிா்வகித்து வருகின்றனா்.

இந்நிலையில், தனியாா் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்றுவந்த இவா்களது மகன் எலேஜா பிளசன் (12), பள்ளி விடுமுறை காரணமாக தேவாலய குடியிருப்பில் இருந்தாா். தேவாலயத்தில் புத்தாண்டு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நீண்டநேரமாக எலேஜா பிளசனை காணவில்லையாம். நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால், ராசிபுரம் காவல் துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா், ராசிபுரம் காவல் துறையினா் இதுகுறித்து விசாரணை நடத்தினா். பின்னா், அங்கிருந்த கிணற்றில் சிறுவன் தவறி விழுந்திருக்கலாம் என சந்தேகமடைந்து 60 அடி ஆழ கிணற்றில் தேடினா். அப்போது, கிணற்றில் விழுந்து சிறுவன் இறந்தது தெரியவந்தது. சிறுவனின் உடலை மீட்ட தீயணைப்புத் துறையினா், பிரேதப் பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.