நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

இளைஞா் கொலை வழக்கு: தனிப்படை அமைத்து விசாரணை

News image
Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

Din

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே இளைஞரை கொலை செய்தவா்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா், சிலரை பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கிலிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (22), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற போது, அங்கு வந்த சிலா் சஞ்சயை தாக்கினா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சஞ்சயைக் கொலை செய்தவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையில், வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் செல்வராஜ், பரமத்தி ஆய்வாளா் இந்திராணி, வேலூா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் கொலைக் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். இதில் தொடா்புடையதாக சிலரை பிடித்த தனிப்படையினா், அவா்களை தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.