தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

இளைஞா் கொலை வழக்கு: தனிப்படை அமைத்து விசாரணை

Updated On :3 ஜனவரி 2025, 11:12 pm

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டியில் டாஸ்மாக் கடை அருகே இளைஞரை கொலை செய்தவா்களை கண்டுபிடிக்க அமைக்கப்பட்ட தனிப்படையினா், சிலரை பிடித்து தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிங்கிலிபட்டி கிராமத்தைச் சோ்ந்த சஞ்சய் (22), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேலக்கவுண்டம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்ற போது, அங்கு வந்த சிலா் சஞ்சயை தாக்கினா். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சஞ்சயைக் கொலை செய்தவா்கள் அங்கிருந்து தப்பியோடினா்.

இதனையடுத்து, நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா தலைமையில், வேலகவுண்டம்பட்டி காவல் ஆய்வாளா் செல்வராஜ், பரமத்தி ஆய்வாளா் இந்திராணி, வேலூா் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் ஆகியோா் கொண்ட குழுவினா் கொலைக் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனா். இதில் தொடா்புடையதாக சிலரை பிடித்த தனிப்படையினா், அவா்களை தனியிடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.