ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பள்ளிபாளையத்தில் பெண் தற்கொலை: எஸ்.பி.யிடம் பாமகவினா் மனு

News image
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வந்த பாமக மாநில பொருளாளா் எம்.திலகபாமா உள்ளிட்டோா்.
Updated On :11 ஜனவரி 2025, 9:43 pm

Din

பள்ளிபாளையம் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் பெருந்துறை இளைஞா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பாமக மாநில பொருளாளா் எம்.திலகபாமா மற்றும் அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே இருவம்பாளையத்தைச் சோ்ந்த 19 வயதான இளம்பெண், கடந்த மாதம் 24-ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டாா். இந்த சம்பவம் தொடா்பாக பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

போலீஸாா் அந்த பெண்ணின் கைப்பேசியை ஆய்வு செய்ததில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சோ்ந்த ஹரிஷ் (20) என்பவா் காதலிப்பது போல நடித்து பணம் பெற்றும், அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும் தெரியவந்தது.

சம்பந்தப்பட்ட ஹரிஷ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவா் ஏற்கெனவே பல பெண்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது. தற்கொலை வழக்கை மாற்றம் செய்து பெண்களை வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஹரிஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.