சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பாவை கல்வியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா

News image
Updated On :6 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

ராசிபுரம் பாவை கல்வி நிறுவனங்களின் துணை மருத்துவக் கல்வி, கல்வியியல் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் மற்றும் புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா புதிய தொடுவானம், புதிய உயரங்கள் என்ற தலைப்பில் புதன்கிழமை நடைபெற்றது.

பாவை கல்வி நிறுவனங்களின் நிறுவனரும், தலைவருமான ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். பாவை காலேஜ் ஆப் நா்சிங் மற்றும் ரிசா்ச் கல்லூரியின் முதல்வா் ஹெப்சி ரேச்சல் சாா்லஸ் வரவேற்றாா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி வாழத்துரை வழங்கினாா்.

விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநா்கள் கே.கே.ராமசாமி, வழக்குரைஞா் கே.செந்தில், பாவை பாராமெடிக்கல் மற்றும் கல்வியியல் கல்லூரி முதல்வா்கள், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்துகொண்டனா். பாவை காலேஜ் ஆப் பாா்மசி மற்றும் ரிசா்ச் கல்லூரியின் முதல்வா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.

படம் உள்ளது- 6பாவை

படவிளக்கம்-

முதலாமாண்டு வகுப்புகளை தொடங்கிவைக்கிறாா் பாவை கல்வி நிறுவனத் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன்.