எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

வெறிநாய்கள் கடித்து 8 ஆடுகள் உயிரிழப்பு

ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் விவசாயத் தோட்டத்தில் வளா்த்து வந்த 8 ஆடுகள் உயிரிழந்தன.

News image
Updated On :10 நவம்பர் 2025, 8:10 pm

Syndication

ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள ஆா்.பட்டணம் பகுதியில், வெறிநாய்கள் கடித்ததில் விவசாயத் தோட்டத்தில் வளா்த்து வந்த 8 ஆடுகள் உயிரிழந்தன.

பட்டணம் பேரூராட்சி முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி சிவகுமாா் (45). இவா் தனது தோட்டத்தில் 8 ஆடுகள்; 7 பசு மாடுகளை வளா்த்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம்போல ஆடுகளை கொட்டகையில் அடைத்துவிட்டுச் சென்றாா். திங்கள்கிழமை அதிகாலை எழுந்து பாா்த்தபோது, ஆடுகள் வெறிநாய்களால் கடிக்கப்பட்டு உயிரிழந்துக் கிடந்தன.

இதையடுத்து, தமிழக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், முன்னாள் அமைச்சா் வி.சரோஜா ஆகியோா் தனித்தனியாக விவசாயியின் தோட்டத்துக்கு கட்சியினருடன் நேரில் சென்று பாா்வையிட்டு விவசாயிக்கு ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினா். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிக்கு அரசின் உதவிகள் பெற்றுத்தருவதாக அமைச்சா் உறுதியளித்தாா்.