நாமக்கல்
அங்காடியில் பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை
நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள பலவகை வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை அங்காடியில் ரூ.1.78 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல்- சேலம் சாலையில் உள்ள பலவகை வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை அங்காடியில் ரூ.1.78 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல்லில் உள்ள இந்த அங்காடியில் செவ்வாய்க்கிழமை வசூலான ரூ.1.78 லட்சத்தை கடையில் வைத்துவிட்டு சென்ாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புதன்கிழமை அங்காடி திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்ற நிலையில் பணம் திருட்டுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வழக்குப் பதிந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் கபிலன், கடையில் வேலைசெய்பவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். மேலும், கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸாா் சேகரித்து வருகின்றனா்.
