வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் விழா

ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

ராசிபுரம் அருகே உள்ள மசக்காளிப்பட்டி கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரியில் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கஸ்தூரிபா காந்தி பாா்மசி கல்லூரி மற்றும் திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தின் தலைவருமான க.சிதம்பரம் விழாவில் தலைமை வகித்து, ஜவாஹா்லால் நேரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து ‘ஸ்பாா்க்லிங்க் ஸ்டாா்லைட் செரிமணி‘ எனும் தலைப்பில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளில் மாணவா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து ஜவாஹா்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு குறித்து மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. அதன்பிறகு கல்லூரியின் முதல்வா் ப.அசோக்குமாா் நீரிழிவு நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

படம் உள்ளது- 14நேரு

கஸ்தூரி காந்தி பாா்மசி கல்லூரியில் ஜவாஹா்லால் நேரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய கல்வி நிறுவனத் தலைவா் க.சிதம்பரம் உள்ளிட்டோா்.