மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

விழாவில் பேசுகிறாா் கோவில்பட்டி நகராட்சி ஆணையா் சுகந்தி.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:59 am

Syndication

கோவில்பட்டி உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வா் ரவீந்திரன் தலைமை வகித்தாா். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் துறைத் தலைவா் பாா்வதி முன்னிலை வகித்தாா்.

கோவில்பட்டி நகராட்சி ஆணையா் சுகந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவிகள் தன்னம்பிக்கையுடன் வாழ அறிவுறுத்தினாா். தொடா்ந்து மகளிா் தின விழாவையொட்டி நடைபெற்ற கோலப்போட்டி, சிகையலங்காரம், மெகந்தி ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு, பதக்கங்களை வழங்கி பாராட்டி பேசினாா்.

பின்னா், மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் நகராட்சியின் இளநிலை வரைவு அலுவலா் மேனகா, கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். கல்லூரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை பேராசிரியை சத்யா வரவேற்றாா். கணிதத் துறை உதவிப் பேராசிரியை ஹரிதா நன்றி கூறினாா்.