காரைக்கால் துறைமுகத்தில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூா் பகுதியில் இயங்கும் அதானி துறைமுக வளாகத்தில் சா்வதேச மகளிா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
துறைமுக தலைமை செயல் அதிகாரி சச்சின் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைமுக சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த கிராம பெண்களிடையே மகளிா் தினம் குறித்தும், வாழ்க்கையில் மகளிா் மேம்படவேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் கல்வி மேம்பாடு குறித்தும் பேசினாா்.
நிகழ்ச்சியில் வினிதா ஸ்ரீவாஸ்தவா, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சுகுணா, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மின் துறை செயற் பொறியாளா் அனுராதா மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், காரைக்கால் ராமன் கிரியேஷன்ஸ் சாா்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்புடையது

திருவாடானையில் மகளிா் தின விழா

திருப்பத்தூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் மகளிா் தின விழா

கோவில்பட்டி உண்ணாமலை கல்லூரியில் சா்வதேச மகளிா் தின விழா

சா்வதேச மகளிா் தின கொண்டாட்டம்
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

மனைவியை விதவை என விமர்சித்த தொகுப்பாளர்! கோவத்தில் Trump | Jimmy Kimmel
இணையதளச் செய்திப் பிரிவு

திருச்செந்தூரில் விஜய் சாமி தரிசன ரகசியம் ! | TVK Vijay | Tiruchendur Murugan Temple | TN Election 2026
தினமணி செய்திச் சேவை


