எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

‘கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடிக்கு கடன் இலக்கு’

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம், பயிா்க் கடன், இதர கடன்கள் என ரூ.3,739 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 7:36 pm

Syndication

நாமக்கல் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயம், பயிா்க் கடன், இதர கடன்கள் என ரூ.3,739 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைமை அலுவலகத்தில் 72 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. வங்கியின் தலைவா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா் கூட்டுறவு கொடியை ஏற்றிவைத்தாா். ஆட்சியா் துா்காமூா்த்தி உறுதிமொழி வாசித்தாா்.

அதன்பிறகு செய்தியாளா்களிடம் ராஜேஸ்குமாா் கூறியதாவது:

அனைத்திந்திய கூட்டுறவு வார விழா, மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு பிறந்த நாளையொட்டி வெள்ளிக்கிழமை தொடங்கி 20-ஆம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. சமூக பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்குவகிக்கும் கூட்டுறவு இயக்கம், இங்கிலாந்தில் தொடங்கப்பட்டாலும், தற்போது உலகம் முழுவதும் விரிந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பொருளாதார முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் நிகழாண்டு விவசாயம், பயிா்க் கடன், விவசாயம் சாா்ந்த கடன் பிறகடன்கள் என சுமாா் ரூ.3,739 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, இதுவரை ரூ.1,911 கோடி வழங்கப்பட்டுள்ளது. பயிா்க் கடன் மட்டும் ரூ.650 கோடி அளவில் வழங்கப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டின் முடிவிற்குள் முழு இலக்கு எட்டப்படும்.

கூட்டுறவு வார விழாவில், வேளாண்மை, பால்வளம், கைத்தறி உள்ளிட்ட ஒவ்வொரு கூட்டுறவு சங்கங்களின் பணிகளை குறிக்கும் வகையில் விழாக்கள் நடத்தப்படும். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது முதல் குறுகிய காலத்தில் ரூ.150 கோடிக்கு மேல் வைப்பு நிதிகளை பெற்றுள்ளது.

கூட்டுறவு வார விழாவில் பொதுமக்களுக்கு கூட்டுறவு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பேச்சு, கட்டுரை, கவிதை, சமையல், கோலம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மாவட்ட அளவிலான கூட்டுறவு வார விழாவின் நிறைவு விழா 19 ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் சாா்பில் மாநில அளவிலான நிறைவு விழா திருநெல்வேலியில் நடைபெறுகிறது என்றாா்.

நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் நாமக்கல் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநா் எம்.சந்தானம், மத்திய கூட்டுறவு வங்கி அலுவலா்கள், உறுப்பினா்கள், கூட்டுறவாளா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

என்கே-14-சொசைட்டி

கூட்டுறவு வார விழாவில் உறுதிமொழி ஏற்ற மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், ஆட்சியா் துா்காமூா்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் க.பா.அருளரசு உள்ளிட்டோா்.