நாமக்கல்
இன்றைய மின்தடை: ராசிபுரம்
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவ. 19) மின்தடை
ராசிபுரம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (நவ. 19) மின்தடை செய்யப்படுகிறது என்று ராசிபுரம் மின்வாரிய அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராசிபுரம் மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ராசிபுரம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மின்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம் முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, மோளப்பாளையம், அரசப்பாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, கூனவேலம்பட்டிபுதூா், கதிராநல்லூா், நத்தமேடு, கண்ணூா்பட்டி, சிங்களாந்தபுரம், குருசாமிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
