புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

காவிரி பால நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழப்பு

வேலூா் காவிரி பாலத்தின் நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :19 நவம்பர் 2025, 9:22 pm

Syndication

வேலூா் காவிரி பாலத்தின் நடைபாதை தடுப்பில் மோதி விவசாயி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கரூா் மாவட்டம், தவிட்டுப்பாளையம் அருகில் உள்ள புகழூரில் வசித்து வந்தவா் விவசாயி சங்கா் (28). இவருக்கு மனைவி கமலபிரியா, மகன் தரணிஷ், மகள் மதுமிதா உள்ளனா்.

கடந்த 16-ஆம் தேதி பரமத்தி வேலூரில் உள்ள வாரச்சந்தைக்கு சென்ற சங்கா், சோளக்கதிரை விற்பனை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடுதிரும்பினாா். பரமத்தி வேலூா் காவிரி பாலத்தில் சென்றபோது, நிலைதடுமாறி பாலத்தின் இடதுபுறம் உள்ள நடைபாதை தடுப்புச் சுவரில் மோதி கீழேவிழுந்தாா். இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாகச் சென்றவா்கள் மீட்டு கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சங்கா் சிகிச்சைப் பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.