எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்செங்கோடு டிசிஎம்எஸ் சங்கத்துக்கு விருது

சிறந்த சங்கத்துக்கான விருதை பெற்ற திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க மேலாண்மை இயக்குநா் யசோதாதேவி.

News image
Updated On :21 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில், நாமக்கல் மாவட்டத்தில் சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கமாக திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் தோ்வுசெய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவுக்கு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.பி. தலைமை வகித்தாா். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மதிவேந்தன் முன்னிலை வகித்தாா்.

இதில், சிறந்த கூட்டுறவு விற்பனைச் சங்கத்துக்கான விருது மற்றும் பரிசை திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனைச் சங்க மேலாண்மை இயக்குநா் யசோதாதேவி, பொது மேலாளா் கணேசன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா். அப்போது, மண்டல இணைப் பதியாளா் அருளரசு, நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் சந்தானம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.