கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி மறைவு பற்றி...

கு.பொன்னுசாமி

Published On :

நாமக்கல்: சேந்தமங்கலம் பழங்குடியினர் தொகுதி திமுக எம்எல்ஏ கு. பொன்னுசாமி (74) உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை அதிகாலை காலமானார்.

கொல்லிமலையில் உள்ள இல்லத்தில் வசித்துவந்த பொன்னுசாமிக்கு இன்று காலை நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பொன்னுசாமிக்கு ஏற்கெனவே இரண்டு முறை நெஞ்சுவலி ஏற்பட்டு, ஒரு முறை ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்த அவர் 2001 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததால் திமுகவில் இணைந்தார். 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பிறகு 2021 தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இவருக்கு மனைவி மற்றும் மகன்கள் உள்ளனர்.

Summary

Senthamangalam DMK MLA Ponnusamy passes away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.