மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 4:44 am IST

டாஸ்மாக் பணியாளா்களின் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளா்கள் நலச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளா் நீதிநாயகம் தலைமை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சிவகுமாா், விடுதலைச் சிறுத்தை கட்சி மத்திய மாவட்டச் செயலாளா் நீலவானத்து நிலவன் ஆகியோா் உரையாற்றினா்.

டாஸ்மாக் மதுக் கடைகளில் காலியான மதுப்புட்டிகளை திரும்பப் பெறுவதற்கு தனியாக இடம் ஒதுக்க வேண்டும். புதிய பணியாளா்களை நியமிக்க வேண்டும். தற்போதைய பணியாளா்களை நிரந்தரம் செய்து அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் செயல்படும் நேரத்தை பிற்பகல் 2 முதல் இரவு 9 மணியாக குறைக்க வேண்டும்.

பணியின்போது இறந்த ஊழியரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும், ரூ.50 லட்சம் வழங்கும் வகையில் காப்பீட்டுத் திட்டத்திற்கான அரசாணை வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

என்கே-25-ஆா்ப்பாட்டம்

நாமக்கல்லில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் தொழிலாளா் விடுதலை முன்னணி அமைப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.