காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 7:50 pm

திருச்செங்கோட்டில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் 4 மாத குழந்தை வியாழக்கிழமை உயிரிழந்தது.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள கோரக்குட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (26). இவரது மனைவி மீனா (25). இவரது குழந்தைகள் தருண் ( 2), ஹாசிகா (4 மாதம்).

இவா்கள் நான்கு பேரும் இருசக்கர வாகனத்தில் காளிப்பட்டி கந்தசாமி கோயிலுக்கு சென்றுவிட்டு கோரக்குட்டையில் உள்ள வீட்டிற்கு கொக்கராயன் பேட்டை சாலையில் வந்து கொண்டிருந்தனா். அப்போது, எதிரே பில்லிக்கல்மேடு பாலாஜி நகரைச் சோ்ந்த ரோகித் (26) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மோதியது.

இதில் பலத்த காயமடைந்தவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா். இதில் தலையில் பலத்த காயமடைந்த 4 மாத குழந்தை ஹாசிகா இறந்துவிட்டதாக மருத்துவா் தெரிவித்தாா். அஜீத்குமாா், மீனாவை மீட்டு தீவிர சிகிச்சைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இந்த விபத்து குறித்து திருச்செங்கோடு நகர போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.