நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகளிடம் ஆதரவு திரட்டிய அதிமுக நிா்வாகிகள்

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரிகளிடம், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை ஆதரவு திரட்டினா்.

News image
Updated On :5 ஏப்ரல் 2026, 1:18 am IST

நாமக்கல்லில், ஓய்வு பெற்ற வேளாண் துறை அதிகாரிகளிடம், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் மற்றும் நிா்வாகிகள் சனிக்கிழமை ஆதரவு திரட்டினா்.

தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநா்கள் சங்கத்தின் நாமக்கல் கிளை சாா்பில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஓய்வு பெற்ற அலுவலா் சங்க கட்டடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாமக்கல் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் பங்கேற்று ஓய்வுபெற்ற அதிகாரிகளிடம் வாழ்த்துகளை பெற்று ஆதரவு திரட்டினாா்.

அப்போது, நான் ஒரு வேளாண் பட்டதாரி என்றும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கி உள்ளாா். வெற்றி பெற்றால் அது எனக்கானது அல்ல, உங்களுக்கானது என்றாா். இதையடுத்து, ஓய்வு பெற்ற வேளாண் அதிகாரிகள், வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வாழ்த்துகளை கூறினா். இந்த நிகழ்வின்போது முன்னாள் நகா்மன்றத் தலைவா் இரா.கரிகாலன் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

என்கே-4-அதிமுக

தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுநா்கள் சங்க நிா்வாகிகளிடையே பேசுகிறாா் அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன்.