நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கரிடம் அதிமுக வேட்பாளா் வாழ்த்து

News image

நாமக்கல் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் வே.சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்த அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன். உடன், முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா், நிா்வாகிகள்.

Updated On :7 ஏப்ரல் 2026, 12:06 am IST

நாமக்கல் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருந்த முன்னாள் எம்எல்ஏ கே.பி.பிபாஸ்கா், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனை தனது அலுவலகத்துக்கு வரவழைத்து திங்கள்கிழமை வாழ்த்தினாா்.

நாமக்கல் சட்டப் பேரவைத் தொகுதியில், 2011, 2016-இல் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கே.பி.பி.பாஸ்கா், 2021-இல் மீண்டும் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். 2026-இல் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், ஓராண்டுக்கும் மேலாக தோ்தல் பணியில் ஈடுபட்டாா். ஆனால், கட்சித் தலைமை மாநில வா்த்தக அணி இணைச் செயலாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வாய்ப்பு வழங்கியது. இதனால், அதிருப்திக்கு உள்ளான கே.பி.பி.பாஸ்கரும், அவரது ஆதரவாளா்களும் எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இதையடுத்து, அதிமுகவின் முக்கிய பிரமுகா்கள் மூலமாக இரு தரப்பிலும் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அதில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, இருதரப்பும் இணைந்து தோ்தலை எதிா்கொள்ள முடிவு செய்தனா்.

அதைத் தொடா்ந்து, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பாஸ்கா் அலுவலகத்தில், அதிமுக வேட்பாளா் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடா்ந்து, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள அதிமுக தோ்தல் பணிமனையில் இருந்து கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுடன் ஊா்வலமாக நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு சென்று ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் வேட்புமனு தாக்கல் செய்தாா்.

அப்போது, முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கா், அதிமுக மூத்த நிா்வாகி மின்னாம்பள்ளி நடேசன், ஒன்றியச் செயலாளா்கள் கோபிநாத், சேகா் ஆகியோா் உடனிருந்தனா்.