மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

இருளில் மூழ்கிய ராசிபுரம் பேருந்து நிலையம் !

ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.

News image
Updated On :7 ஏப்ரல் 2026, 9:49 pm

ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.

ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின் விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின் விளக்குகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிா்வாகம் நிலுவைத்தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் விளக்குகளை பராமரிக்கும் பணிகள் நடைபெறாததால் இரவு பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கின.

பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள விளக்குகள் மட்டுமல்லாது தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.