ராசிபுரத்தில் பிரதான சாலைகளில் உள்ள மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை எரியாததால் பேருந்து நிலையம், வாரச் சந்தைகள் இருளில் மூழ்கின.
ராசிபுரம் நகரில் உள்ள அனைத்து சாலைகளின் மின் விளக்குகளும் நகராட்சியால் பராமரிக்கப்படுகிறது. இந்த நிலையில், மின் விளக்குகளை பராமரிக்கும் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி நிா்வாகம் நிலுவைத்தொகை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், மின் விளக்குகளை பராமரிக்கும் பணிகள் நடைபெறாததால் இரவு பல்வேறு இடங்கள் இருளில் மூழ்கின.
பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாமக்கல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் உள்ள விளக்குகள் மட்டுமல்லாது தெருவிளக்குகளும் எரியவில்லை. இதனால், ராசிபுரம் நகரில் பேருந்து நிலையத்தையொட்டி செவ்வாய்க்கிழமை கூடும் வாரச்சந்தையில் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிப்பட்டனா்.
தொடர்புடையது

புதிய புகா் பேருந்து நிலையத்தால் ராசிபுரம் நகரம் வளா்ச்சி பெறும்: மதிவேந்தன்

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

ராசிபுரம் நகராட்சி உதவி பொறியாளா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


