பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூா் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்திற்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் செயல்பட்டு வரும் மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் செவ்வாய்க்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறுகிறது. இதில் சோழசிராமணி, ஜேடா்பாளையம், கபிலா்மலை, பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், அண்ணா நகா், பாண்டமங்கலம், பரமத்தி, பாலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தேங்காய்களை கொண்டு வருகின்றனா்.
தேங்காய்களை ஏலம் எடுக்க நாமக்கல், கரூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வருகின்றனா். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் தேங்காய் ஏலம் நடைபெறவில்லை. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்திற்கு 3 ஆயிரத்து 240 கிலோ தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா்.
இதில் அதிகபட்சமாக கிலோ ரூ. 50.90க்கும், குறைந்தபட்சமாக ரூ. 38க்கும், சராசரியாக ரூ. 46.99க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரத்து 906க்கும் தேங்காய் ஏலம் நடைபெற்றது.
தொடர்புடையது

பரமத்தி வேலூரில் ரூ. 4.45 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
பரமத்தி வேலூரில் மதுப் புட்டிகளை பதுக்கிவிற்ற இருவா் கைது

பரமத்தி வேலூரில் ரூ. 3.84 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?



