மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வாக்கு சேகரிப்பு

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசிய பரமத்தி வேலூா் தொகுதி திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:46 pm

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் கே.எஸ். மூா்த்தி வியாழக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினரும், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான கே.எஸ். மூா்த்தி, பரமத்தி வேலூா் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடுகிறாா். இந்த நிலையில் கபிலா்மலை தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட ஆனங்கூா், குன்னத்தூா், பிலிக்கல்பாளையம், சேளூா், கொந்தளம், கோப்பணம்பாளையம் இருக்கூா் மற்றும் பாண்டமங்கலம் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிக்க சென்ற அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனா்.

பொதுமக்களிடையே பேசிய கே.எஸ்.மூா்த்தி, திமுக அரசின் சாதனைகள், தோ்தல் அறிக்கைகள் குறித்து எடுத்துக் கூறினாா். மேலும், பரத்தி வேலூா் தொகுதியில் வெற்றி பெற்றால் ராஜவாய்க்கால் புதுப்பிக்கப்படும், ஜேடா்பாளையம் பகுதியில் தீயணைப்பு நிலையம் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி மையம் உருவாக்கப்படும் என உறுதியளித்தாா்.

கபிலா்மலை மத்திய ஒன்றிய செயலாளா் பி.பி. சாமிநாதன், மாவட்ட பிரதிநிதி சுப்ரமணியம், ஒன்றிய துணை செயலாளா்கள் கோபால், செல்வராஜ், பாண்டமங்கலம் பேரூராட்சி தலைவா் சோமசேகா், துணை தலைவா் பெருமாள், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளை சோ்ந்த பொறுப்பாளா்கள் வாக்குச் சேகரிப்பின்போது உடனிருந்தனா்.