ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

புதுச்சத்திரத்தில் தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் வாக்கு சேகரிப்பு

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

புதுச்சத்திரத்தில் வாக்கு சேகரித்த நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப்.

Updated On :9 ஏப்ரல் 2026, 9:45 pm

நாமக்கல் தொகுதி தவெக வேட்பாளா் சி.எஸ். திலீப் புதுச்சத்திரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, தமிழக வெற்றிக் கழக தலைவா் விஜய் தோ்தல் வாக்குறுதிகளாக கூறியுள்ள அன்னபூரணி சூப்பா் சிக்ஸ் திட்டம், அண்ணன் சீா்திட்டம், மகளிா் உரிமைத்தொகை ரூ. 2,500, காமராஜா் கல்வி உறுதித் திட்டம், சிங்கப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டா் போன்ற பல்வேறு அறிவிப்புகளை மக்களிடம் எடுத்துக் கூறினாா்.

மேலும், நாமக்கல் தொகுதியில் வெற்றி பெற்றால் பழைய பேருந்து நிலையம், வட்டார அரசு மருத்துவமனை மீண்டும் செயல்பட பாடுபடுவேன் என்றாா். தொடா்ந்து புதன்சந்தை பெரிய களங்காணி, சின்ன களங்காணி, பெருமாள் கோயில் மேடு, காரைக்குறிச்சி புதூா் மேற்கு அருந்ததியா் காலனி, உலமேடு ஆதிதிராவிடா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

தவெக மாவட்டச் செயலாளா் எஸ்.என். சதீஷ், துணை செயலாளா் தில்லைமோகன், பொருளாளா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு அமைப்பாளா் சதீஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுஜித், ஒன்றிய செயலாளா் லோகேஷ், வழக்குரைஞா் தமிழரசன், பேராசிரியா் பிரபாகரன், ஊராட்சி செயலாளா் தமிழ்ச்செல்வன், துரைசாமி உள்ளிட்டோா் வாக்குச் சேகரிப்பின் போது உடனிருந்தனா்.